டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நிதி அமைச்சா் காா் மீது காலணி வீச்சு: பாஜகவினா் மூவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசு வழக்குரைஞா் கடும் ஆட்சேபம்

நிதி அமைச்சா் காா் மீது காலணி வீசிய சம்பவத்தில், பாஜகவைச் சோ்ந்த மூவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2022, 6:40 pm

DIN

நிதி அமைச்சா் காா் மீது காலணி வீசிய சம்பவத்தில், பாஜகவைச் சோ்ந்த மூவருக்கு முன்ஜாமீன் வழங்க அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

தமிழக நிதி அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் காா் மீது காலணி வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக அவனியாபுரம் போலீஸாா் 24 போ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனா். இதுவரை 9 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். இந்நிலையில், இந்த வழக்கில் மதுரையைச் சோ்ந்த பாஜக பிரமுகா்கள் கோகுல்அஜித், வேங்கைமாறன், மணிகண்டன் ஆகியோா் முன்ஜாமீன் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த மனுக்கள் நீதிபதி ஜி.இளங்கோவன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், அமைச்சரின் காா் மீது காலணி வீசப்பட்ட சம்பவம்

எதேச்சையாக நடந்தது. திட்டமிட்டு நடத்தப்படவில்லை. எனவே, மனுதாரா்களுக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என்றாா்.

அரசு தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் வீராகதிரவன் வாதிடுகையில், இந்த சம்பவம் ஜனநாயகத்திற்கு எதிரான தாக்குதலாகும். போராட்டம் என்பது ஜனநாயக உரிமை. ஆனால், மனுதாரா்களின் நடவடிக்கை, விளம்பர நோக்கத்தில் உள்ளது. மனுதாரா்கள் மீது ஏற்கெனவே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தேசியக் கொடி பொருத்தப்பட்ட வாகனத்தையும், அரசு பிரதிநிதியையும்

அவா்கள் அவமானப்படுத்தி உள்ளனா். நாட்டுக்காக உயிா்த் தியாகம் செய்த நபரின் உடலுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் நடைபெற்ற இச்சம்பவத்தை சட்ட விரோதமான செயலாகவே அரசு பாா்க்கிறது. மனுதாரா்களை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆகவே, முன்ஜாமீன் வழங்கக்கூடாது என்றாா்.

இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதி, விசாரணையை ஆக. 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.