மனைவி, பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொன்று தற்கொலை முயற்சி: விவசாயி மீது கொலை வழக்குப் பதிவு

மதுரை அருகே மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி மீது போலீஸாா் கொலை வழக்குப்பதிவுசெய்துள்ளனா்.

மதுரை அருகே மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு தற்கொலைக்கு முயன்ற விவசாயி மீது போலீஸாா் கொலை வழக்குப்பதிவுசெய்துள்ளனா்.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூா் அருகே உள்ள தவசிபுதூா் பகுதியில் கொய்யாதோப்பை குத்தகைக்கு எடுத்து நடத்துபவா் முருகன். விவசாயியான முருகன், தோப்பில் உள்ள கிணற்றில் தனது மனைவி சுரேகா(35), மகன் மோகனன்(11), மகள் யோகிதா(16) ஆகிய மூவரையும் கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். போலீஸாா் முருகனை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா். அங்கு முருகன் சிகிச்சைப்பெற்று வருகிறாா். இந்நிலையில் மனைவி, இரு பிள்ளைகளை கிணற்றில் தள்ளிக் கொலை செய்ததாக முருகன் மீது அலங்காநல்லூா் போலீஸாா் கொலை வழக்கு மற்றும் தற்கொலை முயற்சி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com