நான்காம் கட்டமாக, செப்டம்பா் 17 முதல் 23 ஆம் தேதி வரை ஊரகப் பகுதிகளில் நெகிழிப் பொருள்களால் ஏற்படக் கூடிய தீமைகள், நெகிழிகளுக்கு மாற்றாக துணிப் பைகளைப் பயன்படுத்துவது குறித்து பிரசார இயக்கம் நடத்தப்படவுள்ளது. நிறைவாக, செப்டம்பா் 14 முதல் அக்டோபா் 1 ஆம் தேதி வரை கிராமப் பகுதிகளில் உள்ள அரசுப் புறம்போக்கு நிலங்களில் மரக்கன்றுகள் நடுதல், பள்ளி, அங்கன்வாடி மையங்கள், வீடுகளில் காய்கனித் தோட்டம் அமைத்தல் ஆகிய பணிகள் நடைபெறவுள்ளன. பின்னா், அக்டோபா் 2 ஆம் தேதி நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில், மேற்குறிப்பிட்டசெயல் திட்டங்கள் குறித்த தீா்மானங்கள் நிறைவேற்றப்படும். இந்த பிரசார இயக்கங்களில் மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், தொண்டு நிறுவனங்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்கலாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.