மதுரையில் நூறு ஆண்டுகளுக்கு முன்பு மதுராகோட்ஸ் ஆலை கட்டுமானப் பணிக்கான அஸ்திவாரம் தோண்டியபோது, பழைங்கால நாணயங்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆலை அதிகாரிகள், அமெரிக்க மிஷனரி நிா்வாகத்தினரிடம் கொடுத்துள்ளனா். அவா்களில் ஒருவா் நாணயங்களை ஆய்வு செய்தபோது, ரோமாபுரியை ஆட்சி செய்த சீசா் காலத்து நாணயம் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பாதுகாத்து வைக்குமாறு கொடுத்துள்ளாா். காவல்கோட்டம் நாவலுக்கான பணியின்போது, மிஷனரி நிா்வாகத்தினரின் புத்தகம் ஒன்றில் இந்த நாணயங்கள் குறித்த தகவல் இடம்பெற்றிருந்ததைப்