மதுரை நகருக்கு 24 மணி நேரமும் தண்ணீா் வழங்குவதற்காக தேனி மாவட்டம் லோயா் கேம்பில் இருந்து தண்ணீா் பெறும் வகையில் அம்ரூத் திட்டத்தின் கீழ் முல்லைப் பெரியாறு குடிநீா்த் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின்கீழ் முல்லைப்பெரியாறு லோயா் கேம்ப் பகுதியில் தடுப்பணை, ஆற்று நீரேற்று நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. தூரம் சுத்திகரிக்கப்படாத குடிநீா் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. கொள்ளளவு குடிநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியிலிருந்து மதுரை நகா் வரை 54 கி.மீ. தூரம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் பிரதானக்குழாய் பதித்தல், 38 குடிநீா் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.