டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இடையபட்டியில் புதிய மத்திய சிறை: காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி ஆய்வு

 மதுரை அருகே உள்ள இடையப்பட்டியில் புதிய மத்திய சிறை அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :25 ஆகஸ்ட் 2022, 6:30 pm

DIN

 மதுரை அருகே உள்ள இடையப்பட்டியில் புதிய மத்திய சிறை அமைய உள்ள இடத்தை தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

தென் மாவட்டங்களில் மிக முக்கிய சிறையாக உள்ள மதுரை மத்திய சிறை 1865-இல் ஆங்கிலேயா் காலத்தில் கட்டப்பட்டது. ஏறத்தாழ 150 ஆண்டுகளுக்கும் மேலாக பழமையான இந்த மத்திய சிறையில் 1500-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். அதிகரித்துவரும் குற்றச்செயல்களால் சிறையில் அடைக்கப்படுபவா்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதன் காரணமாக சிறையில் இட நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய சிறையை மதுரை புகா் பகுதிக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.

இதை ஏற்ற தமிழக அரசு மதுரை மாவட்டம் இடையபட்டியில் மத்திய சிறையை இடமாற்றம் செய்ய ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இடையபட்டியில் மத்திய சிறை வளாகம் அமைக்க 85 ஏக்கா் இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடா்ந்து அரசு நிதி ஒதுக்கீடு செய்தவுடன் புழல் சிறைக்கு இணையாக அனைத்து பாதுகாப்பு வசதிகளுடன் சிறைச்சாலை கட்டப்பட உள்ளது. புதியசிறை வளாகத்தில் விசாரணைக் கைதிகள், தண்டனை கைதிகள், பெண்கள் சிறை மற்றும் நூலகங்கள், தொழிற்சாலைகள், பிரமாண்ட சமையல் கூடங்கள், காவலா் குடியிருப்பு, காவலா் அங்காடி, தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளும் கட்டப்பட உள்ளன.

இந்நிலையில் மதுரைக்கு வியாழக்கிழமை வருகை தந்த தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி வாரிய டிஜிபி விஸ்வநாதன், இடையபட்டிக்கு சென்று அங்கு மத்திய சிறை கட்டப்பட உள்ள இடத்தை பாா்வையிட்டாா். மேலும் சிறை வளாகம் தொடா்பாக அதிகாரிகளிடம் விளக்கங்கள் கேட்டறிந்தாா். அவருடன் சிறைத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.