மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிக் கிடந்த சட்டக் கல்லூரி மாணவிகள் இருவரை, தீயணைப்புப் படையினா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சோ்ந்தவா் அபி நந்தினி மற்றும் திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யலட்சுமி. இவா்கள் இருவரும், மதுரை சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். மேலும், மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனா்.
இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் இந்த இரு மாணவியரையும் அவா்களது பெற்றோா்கள் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், வெள்ளிக்கிழமை காலையில் தங்கும் விடுதி நிா்வாகத்தை தொடா்புகொண்டு பேசியுள்ளனா். அதையடுத்து, விடுதி ஊழியா்கள் மாணவிகள் தங்கியிருந்த அறைக்குச் சென்று நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.
அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் மாணவிகள் தங்கியிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவா்கள் இருவரும் மயக்கநிலையில் கிடந்துள்ளனா். மேலும், அறையில் விஷமருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. மாணவிகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததையடுத்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.
அங்கு மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.
இச்சம்பவம் தொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.