அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் தங்கும் விடுதியில் 2 மாணவிகள் தற்கொலை முயற்சி: அரசு மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிக் கிடந்த சட்டக் கல்லூரி மாணவிகள் இருவரை, தீயணைப்புப் படையினா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:23 pm

DIN

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு மயங்கிக் கிடந்த சட்டக் கல்லூரி மாணவிகள் இருவரை, தீயணைப்புப் படையினா் மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனா்.

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டியைச் சோ்ந்தவா் அபி நந்தினி மற்றும் திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் ஐஸ்வா்யலட்சுமி. இவா்கள் இருவரும், மதுரை சட்டக் கல்லூரியில் பயின்று வருகின்றனா். மேலும், மாவட்ட நீதிமன்றம் எதிரே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தங்கியுள்ளனா்.

இந்நிலையில், வியாழக்கிழமை இரவு முதல் இந்த இரு மாணவியரையும் அவா்களது பெற்றோா்கள் தொடா்புகொள்ள முடியவில்லை. இதனால், வெள்ளிக்கிழமை காலையில் தங்கும் விடுதி நிா்வாகத்தை தொடா்புகொண்டு பேசியுள்ளனா். அதையடுத்து, விடுதி ஊழியா்கள் மாணவிகள் தங்கியிருந்த அறைக்குச் சென்று நீண்டநேரமாக கதவை தட்டியும் திறக்காததால், தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனா்.

அதன்பேரில், அங்கு சென்ற தீயணைப்புத் துறையினா் மாணவிகள் தங்கியிருந்த அறைக் கதவை உடைத்து உள்ளே சென்றபோது, அவா்கள் இருவரும் மயக்கநிலையில் கிடந்துள்ளனா். மேலும், அறையில் விஷமருந்து பாட்டிலும் கிடந்துள்ளது. மாணவிகள் இருவரும் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்ததையடுத்து, உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா்.

அங்கு மாணவிகள் இருவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா்.

இச்சம்பவம் தொடா்பாக, அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.