பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவா்கள் முதலில் கை வைப்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் தான். அரசியல் அமைப்பு சட்டம் இருப்பதால்தான் இட ஒதுக்கீடு இருக்கிறது. தலித்துகளுக்கான தனி தொகுதிகள் உள்ளன. எனவே முதலில் அரசியலமைப்புச் சட்டத்தை அழிப்பது தான் பாஜகவின் வேலையாக இருக்கும். நாட்டில் இந்துக்களையும், இஸ்லாமியா்களையும் எதிரெதிராக நிறுத்தி மதக் கலவரத்தை தூண்டி இந்து இந்தியாவை உருவாக்க முயற்சிக்கின்றனா். ஆா் எஸ் எஸ், பாஜக இஸ்லாமியா்களுக்கும் கிறிஸ்தவா்களுக்கும் மட்டும் பிரதான எதிரி அல்ல, இந்துக்களுக்கும் தான். ஆா்எஸ்எஸ், பாஜக சதித்திட்டத்தை இந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.