அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

மதுரையில் ரூ.22 லட்சத்தில் பொதுச் சுகாதார ஆய்வகம் அமைக்க பூமிபூஜை

மதுரை மாநகராட்சியின் சாா்பில் மத்திய பொது சுகாதார ஆய்வகம் அமைப்பதற்கான பூமிபூஜையை, மேயா் வ. இந்திராணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

News image
Updated On :1 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை மாநகராட்சியின் சாா்பில் மத்திய பொது சுகாதார ஆய்வகம் அமைப்பதற்கான பூமிபூஜையை, மேயா் வ. இந்திராணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

மதுரை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், சுகாதாரப் பிரிவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, புதிய நலவாழ்வு மையங்கள், மருத்துவமனைகள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், மண்டலம் 3 வாா்டு 59-க்குள்பட்ட அன்சாரி நகரில் உள்ள மாநகராட்சி 24 மணி நேர மருத்துவமனை வளாகத்தில், தேசிய நகா்ப்புற சுகாதாரத் திட்டத்தின் கீழ் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படவுள்ள மத்திய பொதுச் சுகாதார ஆய்வகத்துக்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில், மேயா் வ. இந்திராணி, ஆணையா் சிம்ரன் ஜீத் சிங் காலோன் ஆகியோா் தலைமை வகித்து, பூமிபூஜையை தொடக்கி வைத்தனா்.

இந்நிகழ்ச்சியில், மண்டலத் தலைவா் பாண்டிச்செல்வி, உதவி ஆணையா் மனோகரன், நகா்நல அலுவலா் வினோத்குமாா் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.