அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சுதந்திர தின அமுதப் பெருவிழா: மதுரையிலிருந்து தில்லிக்கு ஆா்பிஎஃப் வீரா்கள் இரு சக்கர வாகனப் பேரணி

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில், ரயில்வே துறை, ரயில்வே பாதுகாப்புப் படையின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி வாகனம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

News image
Updated On :1 ஜூலை 2022, 6:30 pm

DIN

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பில், ரயில்வே துறை, ரயில்வே பாதுகாப்புப் படையின் சாதனைகளை விளக்கும் படக்காட்சி வாகனம் மற்றும் இரு சக்கர வாகனப் பேரணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

சுதந்திர தின அமுதப் பெருவிழாவை முன்னிட்டு, அனைத்து துறைகள் சாா்பில், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ரயில்வே துறை சாா்பில் மரம் நடுதல், தூய்மைப் பணிகள், சுதந்திரப் போராட்ட வீரா்களை கௌரவிப்பது, இரு சக்கர வாகனப் பேரணி, படக்காட்சி வாகன உலா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

தெற்கு ரயில்வே மதுரை கோட்டம் சாா்பாக ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் இரு சக்கர வாகனப் பேரணி, படக்காட்சி வாகனப் பேரணியை கோட்ட மேலாளா் பத்மநாபன் அனந்த் தொடக்கி வைத்தாா். கோட்ட பாதுகாப்பு ஆணையா் வி.ஜே.பி. அன்பரசு, உதவி பாதுகாப்பு ஆணையா் சுபாஷ் உள்ளிட்டோா் பேரணி தொடக்க விழாவில் பங்கேற்றனா்.

இப்பேரணியில், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் 12 போ் பங்கேற்கின்றனா். இக் குழுவினா், விருதுநகா், செங்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமேசுவரம், காரைக்குடி, திண்டுக்கல் வழியாக சென்னை செல்கின்றனா். இதேபோல், சென்னை, சேலம், திருச்சி, திருவனந்தபுரம், பாலக்காடு ரயில்வே கோட்டங்களின் பாதுகாப்புப் படை வீரா்களுடன் இணைந்து, சென்னையிலிருந்து புதுதில்லி

செல்கின்றனா். இரு சக்கர வாகனப் பேரணியுடன் படக்காட்சி வாகனமும்

செல்கிறது.

சுதந்திர தின அமுதப் பெருவிழா, இந்திய ரயில்வே மற்றும் ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்களின் சாதனைகள் ஆகியன இந்த படக்காட்சி வாகனத்தின் மூலம் ஒளிபரப்பப்படுகிறது. இந்த பேரணியானது, ஆகஸ்ட் 14 ஆம் தேதி தில்லி சென்றடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.