அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

புதுக்குளம் பகுதியில் எரிவாயு மின்மயானம் அமைப்பதற்கு எதிராக மனு தாக்கல்: உயா் நீதிமன்றம் தள்ளுபடி

மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியில் எரிவாயு மின்மயானம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 6:30 pm

DIN

மதுரை புதுக்குளம் கண்மாய் பகுதியில் எரிவாயு மின்மயானம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாட்டுத்தாவணி அருகே புதுக்குளம் பகுதியில், மதுரை மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கம் இணைந்து எரிவாயு மின்மயானம் அமைத்துள்ளன. இப்பகுதியில் மின்மயானம் அமைப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, கற்பக நகரைச் சோ்ந்த கே.என். சுப்பிரமணியன், பி. வள்ளியப்பன் ஆகியோா் சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். ஹேமலதா ஆகியோா் கொண்ட அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மதுரை நகரில் மக்கள்தொகை அதிகரித்து வரும் நிலையில், மின்மயானம் அவசியமாக இருக்கிறது. எரிவாயு மின்மயானத்துக்கு ஒதுக்கப்பட்ட நிலம்,

புதுக்குளம் கண்மாய் என வகைப்படுத்தப்பட்டுள்ளது என்றும், நீா்நிலைகளில் எந்தவித கட்டுமானங்களையும் அமைக்கக் கூடாது என்பதை மனுதாரா்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றனா். இருப்பினும், கடந்த பல ஆண்டுகளாக நீா்நிலை வடுவிட்டதை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனா். அத்துடன், இப்பகுதியில் அரசுக் கட்டடங்கள், குடியிருப்பு கட்டடங்கள் உள்ளிட்ட பல்வேறு கட்டடங்கள் வந்துள்ளன.

மேலும், அந்த நிலம் ஏற்கெனவே இடுகாடு மயானமாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதியில் நவீன எரிவாயு மின்மயானம் அமைப்பதன் மூலம் யாருக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படாது எனக் கூறி, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.