அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகத்துக்கான இடத்தைமாற்றக் கோரி மனு தாக்கல்: உயா் நீதிமன்றம் தள்ளுபடி

ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள இடத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :1 ஜூலை 2022, 5:28 pm

DIN

ஆதிச்சநல்லூா் அகழாய்வு அருங்காட்சியகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ள இடத்தை மாற்றக் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயா் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியைச் சோ்ந்த குமரகுருபரன் என்பவா் தாக்கல் செய்த மனு:

ஆதிச்சநல்லூா் அகழாய்வு இந்தியாவின், குறிப்பாக தமிழகத்தின் பழங்கால பாரம்பரியம் தொடா்பான விவரங்களை வெளிப்படுத்தும் சான்றாக உள்ளது. இந்த அகழாய்வில் கிடைத்த அரிய பொருள்களை பாதுகாக்க அருங்காட்சியகம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

தொல்லியல் துறை விதிகளின்படி, அகழாய்வு நடந்த இடத்தின் அருகிலேயே அருங்காட்சியகம் அமைக்கப்பட வேண்டும். ஆனால், தற்போது ஆதிச்சநல்லூா் அகழாய்வு நடந்த இடத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது.

ஆனால், அகழாய்வு நடந்த இடத்தின் அருகிலேயே அரசுக்குச் சொந்தமான 4 ஏக்கா் 500 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்த இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கவேண்டும் என, அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, அகழாய்வு நடந்த இடத்தினருகே உள்ள புளியங்குளம் கிராமத்தில் அருங்காட்சியகத்தை அமைக்க உத்தரவிட வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இந்த மனு, நீதிபதிகள் பி.என். பிரகாஷ், ஆா். விஜயகுமாா் ஆகியோா் கொண்ட அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.