மேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றம்

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2022, 7:08 am

DIN

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வாயிலில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டது.

மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் கடந்த 2018-ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தில் வீர வசந்தராயர் மண்டபம் சேதமடைந்தது.  கோயிலுக்குள் செல்ல தடை செய்யப்படக் கூடாது நீதிமன்ற உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து புது மண்டபம் பகுதியில் செயல்பட்டு வந்த கடைகள் மொத்தமாக குன்னத்தூர் சத்திரத்திற்கு மாற்றப்பட்டது.

தற்பொழுது கிழக்கு கோபுரம் அம்மன் சன்னதி பகுதியில் செயல்பட்டு வந்த 50-க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டு இருந்தன. இந்நிலையில் கடையில் உள்ள பொருட்களை கோயில் நிர்வாகத்தினர் இன்று காலை முதல் அப்புறப்படுத்தி வருகின்றனர். இந்த பொருள்கள் கோயிலின் சிலைகளை மறைப்பதாகவும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.