அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சிலரை இன்னும் கைது செய்யாதது ஏன்? உயா்நீதிமன்றம் கேள்வி

தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

News image
Updated On :23 ஜூன் 2022, 5:42 pm

DIN

தேனி நிலமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் இன்னும் சிலா் கைது செய்யப்படாதது ஏன் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை கேள்வி எழுப்பியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டத்தில் கடந்த 2016-19 ஆம் ஆண்டுகளில் 182 ஏக்கா் அரசு நிலத்திற்கு போலியாக பட்டா வழங்கி மோசடி செய்ததாக, அப்போதைய பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியா், வட்டாட்சியா், நில அளவையா் மற்றும் அதிமுக பிரமுகா்கள் உள்ளிட்டோா் மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இவா்களில் சிலா் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களில் ஒருவரான துணை வட்டாட்சியா் மோகன்ராம், ஜாமீன் கோரி 2-ஆவது முறையாக சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தாா். இவரது மனு நீதிபதி ஆா்.வேல்முருகன் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதி, இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் சிலா் இன்னும் கைது செய்யப்படாமல் இருப்பது குறித்து கேள்வி எழுப்பினாா். மேலும், இதுதொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் வெள்ளிக்கிழமை (ஜூன் 24) அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.