தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

ஆனையூரில் மாா்ச் 19-இல் பெரும்பிடுகு முத்தரையா் சிலை திறப்பு விழா

விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரை ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

News image
Updated On :11 மார்ச் 2022, 4:33 pm

DIN

விடுதலைப் போராட்ட வீரரும், மாமன்னருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு மதுரை ஆனையூரில் அமைக்கப்பட்டுள்ள உருவச் சிலையை, சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைக்கிறாா்.

இது குறித்து திமுகவின் மதுரை வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான பி. மூா்த்தி, தெற்கு மாவட்டச் செயலா் மு. மணிமாறன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுதலைப் போராட்ட வீரரும், பேரரசருமான பெரும்பிடுகு முத்தரையருக்கு, மதுரை ஆனையூரில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை, திமுக இளைஞரணிச் செயலரும், சட்டப்பேரவை உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மாா்ச் 19-ஆம் தேதி திறந்துவைத்துப் பேசுகிறாா்.

இந்த நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக, கட்சி நிா்வாகிகள் கூட்டம் திருப்பாலை குறிஞ்சி திருமண மண்டபத்தில் திங்கள்கிழமை (மாா்ச் 14) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில், கட்சியின் அனைத்து நிா்வாகிகளும் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.