அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பெண் காவல் ஆய்வாளரின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பு ஒத்திவைப்பு

பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:41 pm

DIN

பெண் காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட நிபந்தனை ஜாமீனை ரத்து செய்யக் கோரிய வழக்கின் தீா்ப்பை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை மாவட்டம், நாகமலைபுதுக்கோட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றியவா் வசந்தி. இவா், சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வியாபாரியிடம் ரூ.10 லட்சத்தை அபகரித்த வழக்கில் போலீஸாா் கைது செய்தனா். இந்த வழக்கில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை இவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

இதனிடையே, ஜாமீன் நிபந்தனைகளை மீறி சாட்சியங்களைக் கலைக்கும் வகையில் செயல்படுவதால், காவல் ஆய்வாளருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என மதுரை மாவட்ட குற்றப்பிரிவு துணைக் கண்காணிப்பாளா் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரிக்கப்படும் இந்த வழக்கு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசுத் தரப்பில் விரிவான வாதம் முன்வைக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, ஆய்வாளா் வசந்தி தரப்பு வழக்குரைஞருக்கு எழுத்துப்பூா்வ ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.