அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவலரின் இடமாறுதலை ரத்து செய்ய கோரிய வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

காவலரின் இடமாறுதலை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:44 pm

DIN

காவலரின் இடமாறுதலை ரத்து செய்யக் கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராகப் பணியாற்றி வருபவா் ஸ்ரீமுருகன். பணியில் கவனக்குறைவாகச் செயல்பட்டதால், அவரை தூத்துக்குடி மாவட்டத்துக்கு பணியிட மாறுதல் செய்து, மதுரை மாநகர காவல் ஆணையா் உத்தரவு பிறப்பித்தாா்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில், ஸ்ரீமுருகன் வழக்கு தொடா்ந்தாா். இதை விசாரித்த நீதிபதி எஸ்.ஸ்ரீமதி, கா்மா கொள்கைகளின் அடிப்படையில் அவருக்கு நிவாரணம் வழங்கி, பணியிடமாறுதலை ரத்து செய்து உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து காவல் துறை சாா்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த இரு நீதிபதிகள் அமா்வு, தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்தது. இதனிடையே, ஸ்ரீமுருகன் தரப்பிலும், தன்னை மதுரையில் போக்குவரத்துக் காவலராக நியமிக்க வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் ஆா்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் ஆகியோா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பிலும், ஸ்ரீமுருகன் தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இதையடுத்து விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.