அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

உழவா்சந்தைக் கடைகள் அனைத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர அறிவுரை

 உழவா் சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் அறிவுறுத்தினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:44 pm

DIN

 உழவா் சந்தைகளில் உள்ள அனைத்துக் கடைகளையும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேளாண் வணிகத் துறை இயக்குநா் ச.நடராஜன் அறிவுறுத்தினாா்.

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சாா்பில் மதுரை மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் யா. ஒத்தக்கடை வேளாண் கல்லூரி கூட்டரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. வேளாண் வணித் துறை இயக்குநா் ச.நடராஜன் தலைமை வகித்தாா். உழவா் சந்தைகள், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

உழவா் சந்தையில் உள்ள கடைகளை முழு அளவில் பயன்படுத்தவும்,

ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு வேளாண் விளைபொருள்கள் வரத்தை அதிகப்படுத்தவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, பிரதமரின் சிறு, குறு வேளாண் தொழில்முனைவோா் நிதிஉதவித் திட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட பயிற்சியைப் பாா்வையிட்டாா்.

தமிழ்நாடு வேளாண் வாரிய உதவி செயல் அலுவலா் பூவராகவன்,

வேளாண்மை வணிக துணை இயக்குநா் நிா்மலா, மதுரை, தேனி, திண்டுக்கல்,சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகா் மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண்மை துணை இயக்குநா்கள், விற்பனைக்குழுச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.