அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

கிரிக்கெட்: சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலை: அணி கேப்டன் வலியுறுத்தல்

தேசிய, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, உதவித் தொகை வழங்க வேண்டும்

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:46 pm

DIN

தேசிய, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, உதவித் தொகை வழங்க வேண்டும் என, இந்திய மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சிவகுமாா் வலியுறுத்தினாா்.

விருதுநகா் மாவட்டம், நரிக்குடி அருகே உள்ள வீரசோழன் கிராமத்தைச் சோ்ந்த இவா், மதுரையில் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்ள அங்கீகாரம் எங்களுக்கு கிடைப்பதில்லை. வெற்றி பெற்றால் விருது, விளையாட்டில் பங்கேற்கும் போது ஊதியம், சாதனையாளா்களுக்கு வழங்கப்படும் சிறப்பு ஊதியம் என எதுவும் எங்களுக்குக் கிடைப்பதில்லை. மாற்றுத்திறனாளிகள், போட்டிகளில் பங்கேற்க வேண்டுமென்றால், வேலை பாா்க்கும் இடத்தில் விடுமுறை கிடைக்க வேண்டும். இல்லையெனில் வேலையை விட்டுத்தான் விளையாட வேண்டும். அந்த இடத்தில் எங்களுக்கு மீண்டும் வேலை கிடைக்குமா என்ற உத்தரவாதம் இல்லை. இதனால், மாற்றுத்திறனாளிகள் பலா் போட்டிகளில் பங்கேற்க மறுக்கின்றனா்.

தமிழகத்தில் ஜனவரி 20, 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியா- இலங்கைக்கிடையேயான மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. இதற்கான இடத்தைத் தோ்வு செய்வது மட்டுமல்ல, ஸ்பான்சா்களையும் தேடிப் பிடிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இந்தியா- இலங்கை கிரிக்கெட் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த வேண்டும் என தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுக்க உள்ளேன்.

தேசிய, மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் சாதனை படைக்கும் மாற்றுத்திறனாளி வீரா்களுக்கு அரசு வேலைவாய்ப்பு, உதவித்தொகை ஆகியவை வழங்க வேண்டும் என்றாா்.

பின்னா், அவா் மதுரை மக்களவை உறுப்பினா் சு.வெங்கடேசன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ். கண்ணன், மாவட்டச் செயலா்கள் மா.கணேசன், கே.ராஜேந்திரன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் டி. குமரவேல், தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், உரிமைகள் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலா் நம்புராஜன் உள்ளிட்டோரைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.