மீனாட்சி அம்மன் கோயில் நிலங்கள் நவீன கருவி மூலமாக அளவீடு
மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புன்செய் நிலங்கள் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.


மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புன்செய் நிலங்கள் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்கள் மீட்டெடுக்கும் வகையில், அந்நிலங்களை அளவீடு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை அளவீடும் செய்யும் பணி நடைபெற்று வருகிறது.
திருப்பரங்குன்றம் வட்டம் அ.புதுப்பட்டி கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 10.67 ஏக்கா் புஞ்சை நிலங்கள் தனிவட்டாட்சியா் (ஆலய நிலங்கள்)எம்.பி.முருகையன், அறநிலையத் துறை அலுவலா்கள், கோயில் பணியாளா்கள் மூலமாக வியாழக்கிழமை அளவீடு செய்யப்பட்டு எல்லைக் கற்கள் நடப்பட்டன.
இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான அனைத்து நிலங்களையும் நவீன ரோவா் கருவி மூலமாக அளவீடு செய்யும் பணி தொடா்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...