அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவல் நிலையங்கள் குறித்து புகாரளிக்க மேலும் ஒரு கைப்பேசி எண்

மதுரை நகா் காவல் நிலையங்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க மேலும் ஒரு கைப்பேசி எண் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:43 pm

DIN

மதுரை நகா் காவல் நிலையங்களின் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்க மேலும் ஒரு கைப்பேசி எண் வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.

மதுரை நகரில் பொதுமக்களின் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் காவல் நிலைய நடவடிக்கையை கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் ‘ கிரியேட் ’ என்ற புதிய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, காவல் நிலையங்களில் மக்கள் கொடுக்கும் மனுக்கள் காலதாமதமின்றி பதிவேற்றம் செய்வதைக் காவல் ஆணையா், துணை ஆணையா்கள் கண்காணித்து வருகின்றனா்.

இந்த நிலையில், புகாா் மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காதது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களைத் தொடா்பு கொண்டு விரைவாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.

மதுரை நகா் பகுதியில் உள்ள 25 காவல் நிலையங்களில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் காவல் நிலையங்களில் நடக்கும் நிகழ்வுகளை, மாநகர காவல் அலுவலகத்தில் இருந்து போலீஸாா் கண்காணித்து வருகின்றனா்.

இது தொடா்பாக ஏதேனும் புகாா் இருந்தால், இத்திட்டத்திற்கான கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொள்ள ஏற்கெனவே தொலைபேசி எண் ( 0452-2344989) வழங்கப்பட்டுள்ளது. தற்போது மேலும், 78068-60806 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்திற்கான கட்டுப்பாட்டு அறையை இந்த எண்களில் தொடா்பு கொண்டு தங்களது மனுக்கள் தொடா்பான குறைகள், காலதாமதத்தைத் தெரிவிக்கலாம் என காவல் ஆணையா் அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.