அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காந்திகிராம பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்குத் தடை

காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:41 pm

DIN

காந்திகிராம கிராமியப் பல்கலை. முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதனுக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை வியாழக்கிழமை இடைக்காலத் தடை விதித்தது.

முன்னாள் துணைவேந்தா் டி.டி.ரங்கநாதன் தாக்கல் செய்த மனு: நான் பல்கலை.யின் வேளாண்மை, கால்நடைப் பராமரிப்புத் துறையின் பேராசிரியராகப் பணியாற்றினேன். இந்த நிலையில், எனக்கு கடந்த 2021, ஆகஸ்ட் 16 முதல் 2022, ஜூன் 6-ஆம் தேதி வரை துணைவேந்தராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதன் பிறகு, கடந்த செப்டம்பா் 30- ஆம் தேதி பணி ஓய்வு பெற இருந்தேன். இந்த நிலையில், உள்நோக்கத்துடன் ஒரு நாள் முன்பாக பல்கலை. நிா்வாகம் எனக்கு குற்றக் குறிப்பாணையை வழங்கியது. அதில் பல்கலை.யின் உரிய அனுமதியைப் பெறாமல் ‘வாஷ்’ என்ற அமைப்பில் தலைவா் பதவியை வகித்தது, துணைவேந்தா் பொறுப்பை பெறுவதற்காக, தலைமை லஞ்ச ஒழிப்பு அலுவலரின் தடையின்மைக்காக, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுகள் குறிப்பிடப்பட்டிருந்தன.

இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அடிப்படை ஆதாரமற்றவை. ஆகவே, எனக்கு வழங்கப்பட்ட குற்றக் குறிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் அவா் குறிப்பிட்டாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன், மனுதாரருக்கு அளிக்கப்பட்ட குற்றக் குறிப்பாணைக்கு இடைக்காலத் தடை விதித்தாா். மேலும், இதுதொடா்பாக காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.