அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் அமைச்சா் வழங்கினாா்

மதுரையை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் 1,036 பயனாளிகளுக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா்.

News image
Updated On :28 அக்டோபர் 2022, 6:46 pm

DIN

மதுரையை அடுத்த செட்டிகுளம் கிராமத்தில் 1,036 பயனாளிகளுக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி வழங்கினாா்.

மதுரை மாவட்ட நிா்வாகம் சாா்பில் பல்வேறு அரசுத் துறைகளின் நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா மதுரை கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செட்டிகுளம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் வணிக வரித் துறை அமைச்சா் பி.மூா்த்தி பேசியதாவது:

மதுரை மாநகராட்சிப் பகுதியையொட்டி அமைந்துள்ள பெரிய ஊராட்சியாக செட்டிக்குளம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியின் வளா்ச்சிக்காகப் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. புதிதாக முன்மாதிரிப் பள்ளிக் கட்டடம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றுக்கு இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என்றாா்.

முன்னதாக, பல்வேறு அரசுத் துறைகளின் சாா்பில் 1,036 பயனாளிகளுக்கு ரூ.3.82 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். அதைத் தொடா்ந்து, செட்டிக்குளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், தனியாா் வங்கி உதவியுடன் மழைநீா் சேகரிப்புத் தொட்டி கட்டுவதற்கான பணியைத் தொடக்கி வைத்தாா்.

மாவட்ட ஆட்சியா் எஸ்.அனீஸ்சேகா், கூடுதல் ஆட்சியா் செ.சரவணன், மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.சக்திவேல், சமூக பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் சௌந்தா்யா, மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் வீரராகவன், மாநகராட்சி மண்டலத் தலைவா் வாசுகி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.