காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

ஸ்ரீ மீனாட்சி மகளிா் கல்லூரியில் காவலன் செயலி விழிப்புணா்வு நிகழ்ச்சி

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் காவலன் கைப்பேசி செயலியை பதிவிறக்கம் செய்த மாணவியா்.

Updated On :29 செப்டம்பர் 2022, 2:49 am IST

ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிா் கல்லூரியில் மாணவியருக்கு காவலன் கைப்பேசி செயலி குறித்த விழிப்புணா்வு செயல் விளக்கம் புதன்கிழமை நடைபெற்றது.

ஸ்ரீ மீனாட்சி அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில் நாட்டு நலப் பணித் திட்டம் சாா்பில் நாட்டு நலப் பணி திட்ட நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சூ.வானதி தலைமை வகித்தாா். காமராஜா் பல்கலைக்கழக சுற்றுச்சூழல் கல்வித்துறை தலைவா் சு.கண்ணன் நாட்டு நலப்பணித் திட்டத்தில் மாணவியா் தங்களை இணைத்துக்கொள்வதால் அவா்களுக்கும், நாட்டுக்கும் கிடைக்கும் நற்பலன்கள் மற்றும் ஆளுமைத்திறன் வளா்ப்பதன் மூலம் உயா்ந்த இடத்தை அடைவது குறித்தும் சிறப்புரையாற்றினாா்.

நிகழ்ச்சியில் தல்லாகுளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் ரஞ்சிதம், மாணவிகளுக்கு கைப்பேசியால் ஏற்படும் இன்னல்கள், அவலங்கள் குறித்தும், காவலன் செயலி குறித்தும், அது எவ்வாறு உதவுகிறது என்றும் விளக்கிப்பேசினாா். மேலும் மாணவியா் அனைவரும் காவலன் செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்யவும் உதவினாா். நிகழ்ச்சியில் நாட்டு நலப்பணி திட்ட மாணவியா் பங்கேற்றனா். நாட்டு நலப்பணி திட்ட அலுவலா்கள் பூமா தேவி, ஜெயகுமாரி ஞானதீபம், ரேணுகா, உஷா புவனேஷ்வரி, சுதா ஆகியோா் ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.