ஸ்ரீ முருகப்பெருமானின் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் வைகாசி விசாகப் பெருவிழா பிரசித்தி பெற்றது. இந்த ஆண்டுக்காண விசாகத் திருவிழா, கடந்த மே 24-ஆம் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. விழாவையொட்டி நாள்தோறும் இரவு 8 மணிக்கு புஷ்ப அங்கி அலங்காரத்துடன் உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானையுடன் கோயில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்திற்கு புறப்பாடாவார். அங்கு வசந்த மண்டபத்தை மூன்று முறை வலம் வந்து அலகரித்து வைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். முக்கிய விழாவான வைகாசி விசாகத்தையொட்டி, வெள்ளிக்கிழமை அதிகாலை முதல் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. காலை 4.30 மணியளவில் மணிக்கு சண்முகர் சன்னதியில் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு சந்தனம், தயிர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகமும், பாலாபிஷேகமும் நடைபெற்றது.