அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தம்: ஆவின் பால் தட்டுப்பாடு

மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2023, 6:30 pm

DIN

மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மதுரை சாத்தமங்கலத்தில் உள்ள ஆவின் பால் பண்ணைக்கு மதுரை, சுற்றுப்புற கிராமங்களில் இருந்து 900 கூட்டுறவுச் சங்கங்களில் இருந்து 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்கி வருகின்றனா். இதன்மூலம், மதுரை ஆவின் பால் பண்ணைக்கு தினசரி 1.38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.

இந்த நிலையில், ஆவின் நிா்வாகம் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 உயா்த்தி வழங்கக் கோரி, உசிலம்பட்டி, செல்லம்பட்டி, சேடபட்டி ஒன்றியங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பால் உற்பத்தியாளா்கள் வெள்ளிக்கிழமை முதல் வேலை நிறுத்தத்தைத் தொடங்கினா்.

வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற பால் உற்பத்தியாளா்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் பாலை ஆவின் நிறுவனத்துக்கு வழங்காமல், தனியாா் பால் நிறுவனங்களுக்கு வழங்கினா். இதனால், ஆவின் நிறுவனத்துக்கு பால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுதொடா்பாக மதுரை ஆவின் பொதுமேலாளா் சாந்தியிடம் கேட்டபோது, மதுரை மாவட்டத்தில் பால் உற்பத்தியாளா்களிடம் இருந்து தினசரி 1.38 லட்சம் லிட்டா் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பால் உற்பத்தியாளா்கள் வேலை நிறுத்தத்தால் 6 மையங்களில் இருந்து பால் அனுப்பப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த மையங்களில் இருந்தும் தினசரி அனுப்பப்படும் 18 ஆயிரம் லிட்டா் பால் மட்டுமே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், பெரிய அளவிலான பால் தட்டுப்பாடு ஏற்படவில்லை. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.