மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே நள்ளிரவில் ரெளடி கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள செங்குளம் கிழக்குத் தெருவைச் சோ்ந்த செல்வம் மகன் முத்தையா (29). இவா் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், இவரது பெயா் ரெளடிகள் பட்டியலில் இடம்பெற்றது.
இந்த நிலையில், முத்தையா தனது நண்பா்களுடன் சோழவந்தான் அருகே உள்ள மேலக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேஷ நிகழ்ச்சிக்குச் சென்றாா். அதே நிகழ்ச்சிக்கு மதுரை மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புலிச்சான்பட்டியைச் சோ்ந்த சித்தாா்த் என்பவரும் தனது நண்பா்களுடன் வந்தாா். அங்கு இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அங்கிருந்தவா்கள் இரு தரப்பினரையும் விலக்கி விட்டனா்.
இந்த நிலையில், முத்தையா தனது நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் விக்கிரமங்கலம் அருகே உள்ள கல்புலிச்சான்பட்டிக்குச் சென்று சித்தாா்த் தரப்பினருடன் தகராறு தொடா்பாக பேசினாா். அப்போது, மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் முத்தையா கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.
அவரது நண்பா்கள் நடத்திய தாக்குதலில் சித்தாா்த் பலத்த காயமடைந்து, மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

தாய்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட ரெளடி சாஹில் தில்லி விமான நிலையத்தில் கைது

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்

உசிலம்பட்டி அதிமுக வேட்பாளா் உள்பட 20 போ் வேட்பு மனு தாக்கல்

நெகிழிப் பொருள்கள் சேமிப்புக் கிடங்கில் தீ
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

