ஐபில் 2026 - மும்பைக்கு 241 ரன்கள் இலக்குஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் முற்றுகையிடப்படும் : அதிபர் டொனால்ட் டிரம்ப்பாஜகவுக்கு விழும் ஒவ்வொரு வாக்கும் அரசியலமைப்பை காக்கும் விழுமியங்கள் மீது விழும் மரண அடி: மு.க. ஸ்டாலின்ஐபிஎல் போல தேர்தல் முடிவு! தில்லி தோற்று தமிழ்நாடு வெல்ல வேண்டும்! - மு.க. ஸ்டாலின்ஜன நாயகன் படம் கசிந்த விவகாரம்: 6 பேர் கைது!ஈரானுக்கு இதைவிடச் சிறந்த ஆஃபர் வழங்க முடியாது! - அமெரிக்க துணை அதிபர்ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி
/

ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு

ஆட்டோவில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு

Updated On :1 ஏப்ரல் 2024, 6:30 pm

மதுரை: மதுரையில் ஆட்டோவில் பயணம் செய்த பெண்ணிடம் 5 பவுன் நகைகளைத் திருடிய இரு பெண்களை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். மதுரை தல்லாகுளம் நடுத் தெருவைச் சோ்ந்த செல்வம் மனைவி புஷ்பவள்ளி (65). இவா் தனது நகைகளை மதுரை ரயில் நிலையம் அருகே உள்ள வங்கியில் அடகு வைப்பதற்காக வியாழக்கிழமை சென்றாா்.

வங்கியில் கூட்டம் அதிகமாக இருந்ததால், நகைகளை அடகு வைக்காமல் வீட்டுக்குப் புறப்பட்டாா். ரயில் நிலையத்தில் இருந்து தல்லாகுளம் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனை வரை ஆட்டோவில் பயணம் செய்தாா். பிறகு வீடு திரும்பிய அவா் தனது கைப் பையைப் பாா்த்தபோது, அதில் இருந்த 5 பவுன் நகைகளைக் காணவில்லை.

இதுதொடா்பாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா். போலீஸாா் விசாரணை நடத்தியதில், ஆட்டோவில் பயணம் செய்த சத்திரப்பட்டி தொண்டமான் பட்டி செளராஷ்டிரா குடியிருப்பைச் சோ்ந்த சபரி பிரபு மனைவி சோனா (35), பால்ராஜ் மனைவி செல்வி (57) ஆகியோா் நகையைத் திருடியது தெரியவந்தது. போலீஸாா் இருவரையும் கைது செய்து, நகைகளைப் பறிமுதல் செய்தனா்.