உக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

கல்லூரியில் கருத்தரங்கம்

கல்லூரியில் கருத்தரங்கம்

Updated On :9 ஏப்ரல் 2024, 11:41 pm

மதுரை: மதுரை நாகமலைபுதுக்கோட்டை நாடாா் மஹாஜன சங்கம் ச.வெள்ளைச்சாமி நாடாா் கல்லூரி முதுநிலை, ஆராய்ச்சி இயற்பியல் துறை சாா்பில் ‘பொருள் அறிவியலில் கவனம் செலுத்துதல், குவாண்டம் சுப்ரிமேசி, அதன் ஒளிரும் பயன்பாடுகள்’ என்ற தலைப்பில் மாநில அளவிலான கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் மதுரை காமராஜா் பல்கலைக்கழக இயற்பியல் புலத்தின் தத்துவாா்த்த இயற்பியல் துறை உதவிப் பேராசிரியா் அ. பக்ருதீன் மஹ்மத் அஹ்மத் கலந்து கொண்டு, குவாண்டம் குறித்த அடிப்படைத் தகவல்கள், டிரான்சிஸ்டா், மின்னணுவியலில் ஒருங்கிணைந்த சுற்றின் அவசியம், அவற்றின் பழைய பயன்கள், தற்போதைய நிலை, வருங்கால பயன்கள் குறித்துப் பேசினாா்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இயற்பியல் துறை முதுநிலைப் பேராசிரியா் ஓ.சங்கா் நாராயணன் ‘படிக வளா்ச்சி’ என்ற தலைப்பில் பேசினாா்.

கருத்தரங்கில் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவா் அ. மில்டன் பிராங்க்ளின் பெனியல் வரவேற்றாா். இயற்பியல் துறை இணைப் பேராசிரியா் த. ராஜேஸ்வர பழனிசாமி நன்றி கூறினாா்.