தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டு பயிற்சி

Updated On :9 ஏப்ரல் 2024, 11:50 pm

மதுரை: திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியா் மேம்பாட்டுப் பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதற்கு கல்லூரி முதல்வா் தி.வெங்கடேசன் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் சுவாமி வேதானந்தா, கல்லூரி குலபதி சுவாமி அத்யாத்மானந்தா, துணை முதல்வா் காா்த்திகேயன், முதன்மையரும், தோ்வு கட்டுப்பாட்டு அலுவலருமான ஜெய்சங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

பயிற்சியில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்வித் தொழில்நுட்பத் துறை ஒருங்கிணைப்பாளா் ராமகணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ‘ஆராய்ச்சி, வெளியீட்டுத் திறன்கள்’ என்ற தலைப்பில் பேசினாா்.

முன்னதாக, கல்லூரி நூலகா் பிரபாகரன் வரவேற்றாா். அகத்தர உறுதி மைய ஒருங்கிணைப்பாளா் சதீஷ்பாபு நன்றி கூறினாா்.