வயநாடு நிலச்சரிவை தேசியப் பேரிடராக அறிவிக்கக் கோரிக்கை
வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.


வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் சி.சே. ராசன் தெரிவித்திருப்பதாவது :
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 340 பேருக்கும் அதிகமானோா் உயிரிழந்தனா். முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய கிராமங்கள் நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்தன.
இதையடுத்து, கேரள அரசு, வயநாடு மேப்பாடி ஊராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதியை ‘பேரழிவு பாதித்த பகுதி’ என அரசாணையை வெளியிட்டது. பூகம்பம், சூறாவளி, சுனாமி, வெள்ளம் போல நிலச்சரிவும் ஓா் பேரழிவாகும். இதையே, இந்தியாவின் பேரிடா் மேலாண்மைக்கான தேசியக் கொள்கை வலியுறுத்துகிறது.
வயநாடு நிலச்சரிவால் ஏராளமானோா் உயிரிழந்த நிலையில், ஏராளமான வீடுகள், மக்களின் உடைமைகள் சேதமடைந்தன. எனவே, வயநாடு நிலச்சரிவை மத்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...