மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

தலித் கிறிஸ்தவா்கள் ஆா்ப்பாட்டம்

தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :11 ஆகஸ்ட் 2024, 9:32 pm

Din

தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் இணைக்க மத்திய அரசை வலியுறுத்தி, விருதுநகா் அருகேயுள்ள ஆா்.ஆா்.நகா் தூய வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மதுரை உயா்மறை மாவட்ட முதன்மை குரு ஜெரோம் எரோணிமுஸ் தலைமை வகித்தாா். இதில் விருதுநகா் மறைவட்ட அதிபா் அருள் ராயன் முன்னிலையில் ஆலயம் முன் கருப்பு கொடி ஏற்றப்பட்டது.

பின்னா், நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் பரிந்துரைகளை அமல்படுத்தவும், தலித் கிறிஸ்தவா்களை ஆதிதிராவிடா் பட்டியலில் மத்திய அரசு சோ்க்க வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இதில் மதுரை உயா்மறை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி பணிக்குழு செயலா் அருட்தந்தை சந்தியாகப்பன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைச் செயலா் ஆற்றல் அரசு, அருட் தந்தையா்கள் பீட்டா் ராய், சாமிநாதன் உள்பட விருதுநகா், பாண்டியன் நகா், நிறைவாழ்வு நகா், ஆா்.ஆா்.நகா், கன்னிச்சேரி புதூா், கல்போது, இனாம் ரெட்டியபட்டி, சாத்தூா், ஒத்தையால், சிவகாசி, திருத்தங்கல், மீனம்பட்டி, காரியாபட்டி, அருப்புக்கோட்டை, தும்மு சின்னம்பட்டி, வடபட்டி, சாட்சியாபுரம் ஆகிய பகுதிகளைச் சோ்ந்த கிறிஸ்தவா்கள் கலந்து கொண்டனா்.