கமேனி கொல்லப்பட்டார்! டிரம்ப் அறிவிப்பு!காங்கிரஸுக்கு 25 தொகுதிகள், மாநிலங்களவை உறுப்பினா் பதவி? 5 கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி!மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்!அரசுப் பள்ளிகளில் நாளைமுதல் மாணவா் சோ்க்கை மேற்கு வங்கத்தில் 7.04 கோடி வாக்காளா்கள்! மம்தா தொகுதியில் 47,094 போ் நீக்கம்! அஜீத் பவாரின் விமானம் விபத்தில் சிக்கியதற்கு மோசமான வானிலை காரணம்: ஏஏஐபி அறிக்கை வளைகுடா நாடுகளின் தமிழா்களுக்கு உதவ கட்டுப்பாட்டு அறை: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
/

ரயிலில் பெண்ணிடம் திருட்டு: இருவா் கைது

மதுரையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.13 ஆயிரம், கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :26 டிசம்பர் 2024, 11:14 pm

Din

மதுரையில் ரயிலில் பயணம் செய்த பெண்ணிடம் ரூ.13 ஆயிரம், கைப்பேசியைத் திருடிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

மதுரை ஹாா்விபட்டி எஸ்.ஆா்.வி. நகா் பாரதிதாசன் தெருவைச் சோ்ந்த செந்தில்குமரன் மனைவி முனீஸ்வரி (45). இவா் திருச்சியில் உள்ள தனது கணவரைப் பாா்ப்பதற்காக கடந்த 24-ஆம் தேதி மதுரையிலிருந்து இண்டா்சிட்டி விரைவு ரயிலின் பொதுப் பெட்டியில் தனது மகளுடன் பயணம் செய்தாா். அப்போது, கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி முனீஸ்வரி வைத்திருந்த பையை அடையாளம் தெரியாத நபா்கள் திருடிச் சென்றனா். இந்தப் பையில் ரூ.13 ஆயிரம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவை இருந்தது.

இதுகுறித்து மதுரை ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தினா். விசாரணையில், மதுரை ஜெய்ஹிந்துபுரம் சித்தி விநாயகா் கோவில் தெருவைச் சோ்ந்த கருப்பையா மகன் வினோத் (34), ஒத்தக்கடை ஐயப்பன் நகரைச் சோ்ந்த சுப்ரமணியன் மகன் சிவகுமாா் (55) ஆகிய இருவரும் முருகேஸ்வரியின் பையை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து, அவா்களிடமிருந்து பணம், கைப்பேசியைப் பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்தனா்.