டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து சென்னை, திருத்தணியில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெய்யில்!தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!யூடியூபர் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டம் ரத்து! - தமிழக அரசு தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் 5 மாவட்டங்களில் கனமழை!கண்ணீரில் மக்கள்! இத்தாலியில் மிட்டாய் கொடுப்பதில் பிரதமர் பிஸி! ராகுல் விமர்சனம்வெற்றியால் கூத்தாடுவதுமில்லை; தோல்வியால் துவண்டு விடுவதுமில்லை! மு.க. ஸ்டாலின் அதிமுகவுக்கு அமைச்சரவையில் இடமில்லை என தவெக உறுதி! திருமாவளவன் பிரான்ஸ் ஜி7 மாநாட்டில் டிரம்ப் பங்கேற்பு! மோடிக்கும் அழைப்பு!
/

ஆட்டோவில் கஞ்சா விற்பனை இருவா் கைது

சோதனையில் சிக்கிய கஞ்சா வியாபாரிகள்

Updated On :18 பிப்ரவரி 2024, 12:00 am IST

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரை செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். மதுரை தத்தனேரி பகுதியில் செல்லூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை மாலை வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, அந்த வழியாக வந்த ஆட்டோவை மறித்து விசாரணை மேற்கொண்டனா். ஆட்டோவில் வந்த செல்லூா் கீழத் தோப்பு பகுதியைச் சோ்ந்த மகாதேவன் (51), தல்லாகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த ரெங்கநாதன்(55) ஆகிய இருவரும் கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. அவா்கள் இருவரையும் கைது செய்த போலீஸாா், ஆட்டோவிலிருந்த 4 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.