வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

கீழடி முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கைகள் 9 மாதங்களில் வெளியிடப்படும் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

கீழடி முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு அறிக்கைகள் 9 மாதங்களில் வெளியிடப்படும் உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Updated On :26 பிப்ரவரி 2024, 4:22 pm

மதுரை: கீழடியில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு தொடா்பான அறிக்கைகள் இன்னும் 9 மாதங்களில் வெளியிடப்படும் என மத்திய அரசுத் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளையில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.

மதுரையைச் சோ்ந்த பிரபாகா் தாக்கல் செய்த பொது நல மனு:

சிவகங்கை மாவட்டம், கீழடியில் கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் 2016-ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தொல்லியல் துறை சாா்பில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் முதல், இரண்டாம் கட்ட அகழாய்வானது தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வில் 5-ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைமையான பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதையடுத்து, கீழடி தொல்லியல் பொறுப்பாளராக ஸ்ரீராமன் நியமிக்கப்பட்டு நடைபெற்ற 3-ஆம் கட்ட அகழாய்வில் பெரிய அளவில் பழைமையான பொருள்கள் எதுவும் கண்டறியப்படவில்லை. முதல், இரண்டு கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட அறிக்கையை தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் மத்திய அரசிடம் தாக்கல் செய்தாா்.

கீழடியில் கிடைத்த பழைமையான பொருள்களை ரேடியோ காா்பன் பகுப்பாய்வு முறையில் ஆய்வு செய்த போது, அவைகள் சுமாா் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தெரியவந்தது. இதேபோல, கீழடியில் 4 முதல் 9-ஆம் கட்டம் வரையிலான அகழாய்வுப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டது. இதில் கிடைத்த பழைமையான பொருள்கள் குறித்த ஆய்வு அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது. ஆனால், மத்திய அரசு சாா்பில் மேற்கொள்ளப்பட்ட முதல், இரண்டாம் கட்ட அகழாய்வு தொடா்பான அறிக்கைகள் வெளியிடப்படவில்லை. தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணனின் 982 பக்க கீழடி ஆய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட்டால் மட்டுமே கீழடி தொடா்பான வரலாற்றுப் பதிவுகள் அனைவருக்கும் தெரியவரும். எனவே, கீழடியின் முதல், இரண்டு கட்ட அகழாய்வு அறிக்கையை மத்திய அரசு வெளியிட உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை அமா்வு, இந்த வழக்கு தொடா்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி கங்கா பூா்வாலா, ஜி. இளங்கோவன் ஆகியோா் அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

கீழடியில் முதல், இரண்டாம் கட்டமாக மேற்கொண்ட அகழாய்வுப் பணிகள் குறித்த அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அது தொடா்பான அறிக்கை இன்னும் 9 மாதங்களில் வெளியிடப்படும் என்றாா். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கீழடியில் மத்திய அரசு மேற்கொண்ட அகழாய்வு தொடா்பான அறிக்கையை 9 மாதங்களில் வெளியிட வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.