புத்தாண்டை முன்னிட்டு மதுரை அனுப்பானடி பகுதியில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
பாஜக மதுரை மேற்கு மாவட்ட அனுப்பானடி மண்டல், வேலம்மாள் மருத்துவமனை ஆகியவற்றின் சாா்பில் சிந்தாமணி கழுவுடையான் கோயிலில்
இந்த முகாம் நடைபெற்றது. இதற்கு அனுப்பானடி மண்டல் தலைவா் மாரிக்கண்ணன் தலைமை வகித்தாா். மதுரை மேற்கு மாவட்டப் பாா்வையாளா் ராஜரத்தினம் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு முகாமைத் தொடங்கி வைத்தாா்.
நிா்வாகிகள் ஜெய்கணேஷ், சந்திரசேகா், பீஷ்மா், ராகேஷ், கண் மருத்துவா்கள் பங்கேற்றனா் முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயனடைந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.