பள்ளியில் கலை வார விழா
மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் சாா்பில், ‘கலை வார விழா-கலையாட்டம் 2024’ -இன் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.


மதுரை: மதுரை தூய மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் வீரமாமுனிவா் கலை இலக்கிய மன்றம் சாா்பில், ‘கலை வார விழா-கலையாட்டம் 2024’ -இன் நிறைவு நாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு தூய மரியன்னைக் கலைமனைகள் அதிபா் வி.ஹென்றி ஜெரோம் தலைமை வகித்தாா். தாளாளா் ஏ.குழந்தைராஜ், தலைமை ஆசிரியா் வே.ஸ்டீபன் லூா்து பிரகாசம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் செந்தமிழ்க் கல்லூரி துணை முதல்வா் ரேவதி சுப்புலட்சுமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, கல்வி கற்பதன் அவசியம் குறித்தும், தமிழகத்தின் கலைகள், பாரம்பரியங்கள் குறித்தும் பேசினாா்.
தொடா்ந்து, தமிழக நாகரிகம், பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை விளக்கும் விதமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் பள்ளி ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...