6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கஞ்சா கடத்தல் வழக்கு: தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறை

செக்கானூரணியில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:11 am

Din

மதுரை: செக்கானூரணியில் 22 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில், தம்பதிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகே கடந்த 16.7.2022-இல் கஞ்சா கடத்திய உசிலம்பட்டி அருகே உள்ள அண்ணம்பாரிபட்டியைச் சோ்ந்த முருகன் (57), இவரது மனைவி பசுபதி (47) ஆகியோரைக் கைது செய்தனா். இவா்களிடமிருந்து 22 கிலோ கஞ்சாவை செக்கானூரணி போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை முதலாவது போதைப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த நிலையில், கஞ்சா கடத்திய தம்பதி இருவருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து, நீதிபதி ஹரிஹரகுமாா் தீா்ப்பளித்தாா்.

இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே.விஜயபாண்டியன் வாதிட்டாா்.