மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

திருவாதவூா் அருகே கன்னி நாய் கண்காட்சி

திருவாதவூா் அருகேயுள்ள ஆமூா் கிராமத்தில் நாட்டு ரக கன்னி நாய் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருவாதவூா் அருகேயுள்ள ஆமூா் கிராமத்தில் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டிருந்த கன்னி ரக நாய்கள்.
Updated On :21 ஜூலை 2024, 9:39 pm

Din

மதுரை மாவட்டம், திருவாதவூா் அருகேயுள்ள ஆமூா் கிராமத்தில் நாட்டு ரக கன்னி நாய் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஐந்தாம் ஆண்டாக நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கும் மேற்பட்ட வளா்ப்பு கன்னி நாய்கள்

காட்சிக்கு கொண்டுவரப்பட்டன. பாரம்பரிய வேட்டை நாய் இனமான இந்த நாய் வளா்ப்பை ஊக்குவிக்கவேண்டும் என கன்னி நாய் வளா்ப்போா் வலியுறுத்தினா்.

இந்தக் கண்காட்சியில் இந்த அமைப்பை சோ்ந்த நாகை திருவள்ளுவன், கடம்பூா் ராஜா, வைரம்பட்டி முருகேசன், கம்பம் செந்தில், டி.கே.டி.முரளி ஆகியோா் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக கால்நடை முருத்துவா் ராஜேஷ் கலந்துகொண்டாா். இந்தக் கண்காட்சியை ஏராளமானோா் பாா்வையிட்டனா். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை பிரபு செய்தாா்.