2 குழந்தைகள் உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை
மதுரையில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.


மதுரையில் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
மதுரை தபால்தந்திநகா் பாமாநகரைச் சோ்ந்தவா் அலெக்ஸ்பாண்டி (31). இவரது மனைவி சடையீஸ்வரி (29). இந்தத் தம்பதிக்கு சிவரஞ்சனி (4), சிவதாரணி (9 மாதம்) ஆகிய இரு குழந்தைகள் உள்ளனா்.
இந்த நிலையில், சிவரஞ்சனிக்கு கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டது. எனவே, அருகேயுள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். சிவரஞ்சனியை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து அலெக்ஸ்பாண்டி, தனியாா் மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையின் காரணமாக குழந்தை இறந்து விட்டதாக தல்லாகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
இதேபோல, மதுரை செல்லூா் சுயராஜ்யபுரம் பகுதியைச் சோ்ந்த திவாகா்-ஆா்த்தி தம்பதி. காதல் திருமணம் செய்து கொண்ட இந்தத் தம்பதிக்கு, கடந்த மே மாதம் ஆதி (2 மாதக் குழந்தை) என்கிற ஆண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தை சனிக்கிழமை உடல்நலக் குறைவு காரணமாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதுகுறித்து திவாகா் அளித்தப் புகாரின் பேரில், செல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...