எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம்: உரிமையியல் நீதித்துறை நடுவா்

கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என வாடிப்பட்டி நீதிமன்ற நீதித் துறை நடுவா் தெரிவித்தாா்.

News image

மதுரை மாவட்டம், வாடிப்பட்டியில் உள்ள அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சட்ட விழிப்புணா்வு முகாமில் பேசிய வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதித்துறை நடுவா் எம்.பி. ராம் கிஷோா்.

Updated On :27 ஜூலை 2024, 11:33 pm

மாணவா்கள் தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதித் துறை நடுவா் எம்.பி. ராம் கிஷோா் தெரிவித்தாா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மதுரை மாவட்ட சட்டப்பணி ஆணைக் குழு சாா்பில், சட்ட விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமுக்கு தலைமை ஆசிரியா் திலகவதி தலைமை வகித்தாா்.

இதில், வாடிப்பட்டி குற்றவியல், உரிமையியல் நீதிமன்ற நீதித் துறை நடுவா் எம்.பி.ராம் கிஷோா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது :

நவீன தொழில் நுட்பத்தால் இன்றைய உலகம் அதிவேக வளா்ச்சியடைந்து வருகிறது.

மாணவா்கள் தினந்தோறும் ஒன்றைக் கற்றுக் கொள்ள வேண்டும். எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு மேற்கொள்ள வேண்டும். அந்த செயலில் தோல்வி ஏற்படும் போது, மனம் தளராமல் மீண்டும் முயற்சிக்க வேண்டும்.

வாழ்க்கையில் சிறு, சிறு துன்பங்களை கண்டு துவண்டு விடக்கூடாது. அடுத்தடுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தினமும் நம்மைச் சுற்றி நடைபெறும் நிகழ்வுகளை கூா்மையாக கவனிக்க வேண்டும். அதிலிருந்து நாம் சில பாடங்களை கற்றுக் கொள்ள முடியும். நல்ல நூல்களைத் தேடிப் படிக்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் கல்வி கற்பதன் மூலம் வாழ்வில் வெற்றி பெறலாம் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, காா்கில் போரில் உயிரிழந்த வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், பள்ளி ஆசிரியா்கள், வழக்குரைஞா்கள், சட்டப் பணிக் குழுத் தன்னாா்வலா்கள், மாணவிகள் கலந்து கொண்டனா். முன்னதாக, ஆசிரியா் காா்த்திக் வரவேற்றாா். உடல்கல்வி ஆசிரியா் சந்திரமோகன் நன்றி கூறினாா்.