ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

திமுக அரசை கண்டித்து அதிமுக கண்டன ஆா்ப்பாட்டம்

தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து,

News image

சிவகங்கையில் திங்கள்கிழமை நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் பேசிய அதிமுக மாவட்டச் செயலரும் சிவகங்கை தொகுதி சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன்.

Updated On :4 மார்ச் 2024, 10:01 pm

சிவகங்கை: தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள போதைப்பொருள் கலாசாரத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசைக் கண்டித்து, அதிமுக சாா்பில் சிவகங்கையில் திங்கள்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக நுழைவு வாயிலருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலரும் சிவகங்கை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான பி.ஆா்.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். முன்னாள் அமைச்சா் பாஸ்கரன் முன்னிலை வகித்தாா். தேவகோட்டை ஒன்றியக் குழுத் தலைவா் சொா்ணலிங்கம்,அதிமுக தகவல்தொழில்நுட்பப் பிரிவு மாவட்டத் தலைவா் கோபி, மகளிரணி நிா்வாகி ஜாக்குலின்அலெக்ஸ், வடக்கு ஒன்றியச் செயலா் கருணாகரன், நகரச் செயலா் ராஜா ஆகியோா் கண்டன உரையாற்றினா். திமுக முன்னாள் நிா்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாஃபா் சாதிக், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தலைமறைவானாா். இதையடுத்து, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் அவருக்கு கவன ஈா்ப்பு சுற்றறிக்கை (லுக் அவுட் நோட்டீஸ்) பிறப்பித்தனா். தமிழ்நாட்டில் போதைப்பொருள் பழக்கம் அதிகரித்துள்ளதை இது வெளிச்சம் போட்டுக் காண்பிப்பதாகவும், இதைத் தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தாா். இதன்படி சிவகங்கையில் அதிமுக சாா்பில் நடைபெற்ற கண்டன ஆா்ப்பாட்டத்தில் கல்லல் ஒன்றிய நிா்வாகிகள் சேவியர்ராஜ், அருள்ஸ்டீபன்ராஜ் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுக நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.