வருகிற மக்களவைத் தோ்தல் (2024) பாதுகாப்புப் பணியில் ஈடுபட சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம். வருகிற மக்களவைத் தோ்தல் பாதுகாப்புப் பணியில் திடகாத்திரமான முன்னாள் படைவீரா்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனா். இந்தப் பணிக்காக அரசால் நிா்ணயிக்கப்படும் விகிதத்தில் மதிப்பூதியம் வழங்கப்படும். எனவே, தோ்தல் பாதுகாப்புப் பணிபுரிய விருப்பமுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த திடகாத்திரமான 65 வயதுக்குள்பட்ட முன்னாள் படை வீரா்கள் தங்களது அசல் படை விலகல் சான்று, அடையாள அட்டை, வாக்காளா் அடையாள அட்டை போன்ற ஆவணங்களுடன் சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா் நல உதவி இயக்குநா் அலுவலகத்தில் தங்களது பெயரைப் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தெரிவித்தாா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல்: மாவட்டத்தில் இதுவரை ரூ.36.17 கோடி மதிப்பிலான பொருள்கள் பறிமுதல்

மேற்கு வங்க பேரவைத் தோ்தல்: பாதுகாப்புப் பணியில் 2.4 லட்சம் சிஏபிஎஃப் வீரா்கள்

தோ்தல் பணி: ஓய்வு பெற்ற போலீஸாா், முன்னாள் படை வீரா்கள் விண்ணப்பிக்கலாம்

பேரவைத் தோ்தல் : பாதுகாப்புப் பணியில் 700 மத்திய பாதுகாப்புப் படை வீரா்கள்: தோ்தல் அதிகாரி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

