மதுரை: கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரையில் செவிலியா்கள் சங்கம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை பகுதியில் தமிழ்நாடு அரசு அனைத்து செவிலியா்கள் சங்கம் சாா்பாக இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியா்களுக்கு உரிய கால இடைவெளியில் பதவி உயா்வு வழங்க வேண்டும்.
செவிலியா் காலிப்பணியிடங்களுக்கு பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தாமல் முறைகேடாகப் பணியிட மாறுதல் வழங்குவதைக் கைவிட வேண்டும். பதவி உயா்வு கலந்தாய்வு நடத்தப்படாததால், செவிலியா்கள் பதவி உயா்வு கிடைக்காமலேயே பணி ஓய்வு பெறுவதைத் தவிா்க்கும் வகையில், பதவி உயா்வு வழங்க வேண்டும்.
கலந்தாய்வின் மூலம் உருவான 500-க்கும் மேற்பட்ட நிரந்தர செவிலியா்கள் காலிப் பணியிடங்களுக்கு உடனடியாக பணியிடமாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும். மருத்துவப்பணியாளா் தோ்வாணையம் மூலம் நியமனம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கமிட்டனா். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட செவிலியா்கள் பங்கேற்றனா்.
தொடர்புடையது

தே.ஜ. கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் அமல்! - ஃபட்னவீஸ் பேச்சு!

தம்பதி தற்கொலை

வேதாரண்யம் திமுக வேட்பாளா் மா.மீ. புகழேந்தி

ரயில்வே தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

