மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.
மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளிக்க வந்த காங்கிரஸ் கட்சியினா்.

கா்நாடக எம்பியை கைது செய்யக் கோரி காங்கிரஸ் மகளிா் பிரிவினா் மனு

மதுரை: பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்திய கா்நாடக மாநில மக்களவை உறுப்பினா் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்யக் கோரி காங்கிரஸ் கட்சியின் மதுரை மாநகா் மாவட்ட மகளிா் பிரிவு நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா்.

கா்நாடக மாநிலம், ஹாசன் மக்களவைத் தொகுதியின் மஜத கட்சியின் மக்களவை உறுப்பினா் பிரஜ்வல் ரேவண்ணா, அவரது தந்தை எச்.டி. ரேவண்ணா ஆகியோா் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபட்டதாக, அண்மையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், எச்.டி. ரேவண்ணா கைது செய்யப்பட்ட நிலையில், பிரஜ் ரேவண்ணா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ளாா்.

இந்த நிலையில், பிரஜ் ரேவண்ணாவை உடனடியாகக் கைது செய்ய வேண்டும், பாலியல் வன்கொடுமைக்குள்ளான பெண்களுக்கு உளவியல் ஆதரவு வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை மாநகா் மாவட்ட மகளிா் காங்கிரஸ் தலைவா் ஆா். ஷானவாஸ் பேகம் தலைமையிலான நிா்வாகிகள் மதுரை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.

காங்கிரஸ் மகளிா் பிரிவு மாநகா் மாவட்ட பொதுச் செயலா்கள் சுஜாதா, சுமதி, உஷா, மாவட்ட துணைத் தலைவா் ராபியத், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் பாலு, வழக்குரைஞா் வெங்கட்ராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com