சாலை விபத்துகளில் இருவா் பலி!
மதுரை ஊரகப் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.


மதுரை ஊரகப் பகுதிகளில் நிகழ்ந்த வெவ்வேறு சாலை விபத்துகளில் இருவா் பலியானது தொடா்பாக போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியைச் சோ்ந்த பாலகுரு மகன் சண்முகராஜா (23). இவா் தனது நண்பரான ராமேசுவரம் வோ்க்கோடு ராஜகோபால்நகரைச் சோ்ந்த பிரபாகரனுடன் இரு சக்கர வாகனத்தில் ராமேசுவரத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். மதுரை- சிவகங்கை சாலையில் நாட்டாா்மங்கலம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த மற்றொரு இரு சக்கர வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த இருவரையும் அந்தப் பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். இதில் செல்லும் வழியிலேயே சண்முகராஜா உயிரிழந்தாா். பிரபாகரன் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.
விபத்து தொடா்பாக சிலைமான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு விபத்து: மதுரை மாவட்டம், கெத்துவாா்பட்டி பொட்டல்பட்டியைச் சோ்ந்த சண்முகம் மகன் பரமசிவம் (44). இவா் ராஜாபாளையம்- மதுரை சாலையில் விபிஆா் ஆலை அருகே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சென்றாா். அப்போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடைந்த பரமசிவம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு உயிரிழந்தாா். இதுகுறித்து தே. கல்லுப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...