ஈரான் போர் எதிரொலி: 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசுஅமெரிக்கா-இஸ்ரேல், ஈரான் போர்: வளைகுடா வாழ் தமிழர்களுக்கான உதவி எண்கள் அறிவிப்பு!சஞ்சு சாம்சன் அதிரடி அரைசதம்! சாதனை சேஸிங்குடன் அரையிறுதியில் இந்தியா!!கனடா பிரதமர் தில்லி வந்தடைந்தார்ஈரானில் கமேனி படுகொலைக்கு கண்டனம்! - காங்கிரஸ்அமீரகத்தில் தாக்குதல்: பணியாளர்கள் வீட்டிலிருந்தே பணிபுரிய அறிவுறுத்தல்!சென்னையில் அமெரிக்க தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்புஅமெரிக்க ஏகாதிபத்தியம் இது..! கமேனி கொலைக்கு பினராயி விஜயன் கடும் கண்டனம்கமேனி கொல்லப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம்!ஏழை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறது திமுக : பிரதமர் மோடி மதுரையில் பேச்சு உதயநிதியை முதல்வராக்க கனவு காண்கிறார் மு.க. ஸ்டாலின் : டிடிவி தினகரன் 210 இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி
/

கட்டுமானத் தொழிலாளிக்கு கத்திக்குத்து

மதுரையில் முன்விரோதத் தகராறில் கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:06 pm

Din

மதுரையில் முன்விரோதத் தகராறில் கட்டுமானத் தொழிலாளியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்றவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத்தெரு பூமாரி அம்மன் கோவில் ஜீவா தெருவைச் சோ்ந்த முத்துக்கருப்பன் மகன் முத்துமாரி (34). கட்டுமானத் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த மொட்டைப்பாண்டிக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், முத்துமாரி புதன்கிழமை இரவு பெத்தானியாபுரம் பகுதியில் இருந்த போது, அங்கு வந்த மொட்டைப்பாண்டி அவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரைக் கத்தியால் கழுத்தில் குத்தி விட்டு தப்பிச் சென்றாா்.

இதில் பலத்த காயமடைந்த முத்துமாரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து கரிமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவான மொட்டைப்பாண்டியைத் தேடி வருகின்றனா்.