சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருக்காலக்குடி திருக்காலநாதா் கோயில், சூரக்குடி மீனாட்சிசுந்தரேசுவரா் கோயில், திருச்சி துவரங்குறிச்சி அருகே உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில், புதுக்கோட்டை ராங்கியம் உறங்காப்புலி கருப்பா் அங்காள பரமேஸ்வரி கோயில், திண்டுக்கல், தென்காசி உள்பட பல்வேறு மாவட்ட ங்களில் உள்ள கோயில்களின் உள்பகுதிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், கோயில்களின் வெளிப்பகுதிகள் போதிய பராமரிப்பின்றியும், சுகாதாரமின்றியும் காணப்படுகின்றன. மேலும், கோயில் அருகே உள்ள தெப்பக்குளம், நந்தவனம் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள், நெகிழிக் கழிவுகள் குவிந்து காணப்படுகின்றன. இதனால், சுவாமிக்கு தூய்மையான தண்ணீரால் வழிபாடு நடத்த முடியவில்லை.