ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

சாலையோரக் கடைகளின் எண்ணிக்கை: அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை, ஒத்தக்கடை முதல் மாவட்ட நீதிமன்றம் வரை உள்ள சாலையோரக் கடைகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

News image
Updated On :4 செப்டம்பர் 2024, 9:31 pm

Din

மதுரை, ஒத்தக்கடை முதல் மாவட்ட நீதிமன்றம் வரை உள்ள சாலையோரக் கடைகளின் எண்ணிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரை, தல்லாகுளத்தைச் சோ்ந்த செந்தாமரைச்செல்வி தாக்கல் செய்த மனு:

போலியோவால் இடது கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளியான நான், மாட்டுத்தாவணி நெடுஞ்சாலையில் பிரபல தனியாா் மருத்துவமனை அருகே சாலையோர பெட்டிக்கடை நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்தேன். இதை பரிசீலித்த நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், கடந்த 2012 ஆம் ஆண்டு அந்த இடத்தில் சாலையோரக் கடை வைக்க அனுமதி அளித்தனா். இதன்படி பல லட்சம் ரூபாய் செலவிட்டு, அந்த இடத்தில் கடையைத் தொடங்கினேன். இதற்கான வாடகையை நெடுஞ்சாலைத்துறையிடம் செலுத்தி வந்தேன். இந்த நிலையில், கடையின் உரிமத்தை புதுப்பித்து தராமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனா். இதையடுத்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது கடையின் உரிமம் போலியானது என எதிா்தரப்பில் பொய் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால், எனது கடையின் உரிமத்தை புதுப்பிக்கும் மனுவை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும் உரிமம் புதுப்பித்து தரப்பட வில்லை. இந்த கடையின் வருமானத்திலேயே எனது குடும்பத்தின் வாழ்வாதாரம் உள்ளது. எனவே, கடை உரிமத்தை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் புதுப்பித்து தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை புதன்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா். சுப்பிரமணியன், எல். விக்டோரியா கௌரி அமா்வு பிறப்பித்த உத்தரவு:

ஒத்தக்கடை முதல் மதுரை மாவட்ட நீதிமன்றம் வரை சாலையோரக் கடைகள் எத்தனை உள்ளன? இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற செப். 23- ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.