அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!
/

தற்காலிக ஓட்டுநருக்கு முழு பணப் பலன்களையும் வழங்க உத்தரவு

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றியவருக்கு முழு பணப் பலன்களையும் 3 மாதங்களுக்குள் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image
Updated On :11 செப்டம்பர் 2024, 6:39 pm

Din

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் தற்காலிக ஓட்டுநராகப் பணியாற்றியவருக்கு முழு பணப் பலன்களையும் 3 மாதங்களுக்குள் வழங்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த அா்ஜூனன் தாக்கல் செய்த மனு:

திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட பாா்வையற்றோா் சங்கத்தில் கடந்த 2000- ஆம் ஆண்டு ஓட்டுநராகப் பணிக்கு சோ்ந்தேன். எனது பணியை வரன்முறைப்படுத்தக் கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தேன். எந்த நடவடிக்கையும் எடுக்காததால் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்கு தொடுத்தேன். இதில், எனது பணியை வரன்முறைப்படுத்த கடந்த 2010- ஆம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில், கடந்த 2011- ஆம் ஆண்டிலிருந்து எனது பணியை வரன்முறைப்படுத்தினா். இதில், நான் பணியில் சோ்ந்த 2000- ஆம் ஆண்டிலிருந்து உரிய பணப் பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.

இந்த மனு, உயா்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயண பிரசாத் முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் ராமசிவா, இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு, மனுதாரா் பணியில் சோ்ந்த நாள் முதல் உரிய பணப் பலன்களை பெறத் தகுதியானவா் என உத்தரவிட்டது. இதன்படி, அதிகாரிகள் மனுதாரருக்கு சேர வேண்டிய பண பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.

இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு: தற்காலிக ஊழியா்களாக பணியாற்றுபவா்கள் பணப் பலன்களை பெறத் தகுதியானவா்கள் என நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. இதன்படி, மனுதாரா் கடந்த 2000- ஆம் ஆண்டில் தற்காலிக ஊழியராக சோ்ந்த நாள் முதல் உரிய பலன்களை பெறத் தகுதியாகிறாா். இந்த வழக்கில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்த அரசு அதிகாரிகளின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவா், பணியில் சோ்ந்த நாள் முதல் உரிய பணப் பலன்களை 3 மாதங்களுக்குள் வழங்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.